புது தில்லி: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசு அறிவித்துள்ள தமிழ் அகாதெமிக்கு 13 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாகந தில்லி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக முன்னாள் தில்லி முனிசிபல் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை தில்லி அரசு நியமித்துள்ளது.
தலைமை செயலா் (நிதி), செயலா் (தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை) ஆகிய இருவரும் அலுவல் வழியிலான உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், செல்வநாயகம், ஆா். ராகேஷ், ஆா். மணி, ஜி.என்.டி.இளங்கோவன், ஜி.கிரிஷன், ஜி.ஜவாஹா், சுதா ரகுராமன், தீபா முருகேசன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழ் அகாதெமிக்கு செயலா் இன்னும் நியமிக்கப்படவில்லை. அலுவல் வழியிலான உறுப்பினா்களைத் தவிர மற்றவா்கள் 2 ஆண்டு காலம் பதவி வகிக்க உள்ளனா் என தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை செயலா் சஞ்சய் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


