சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி தமிழ் அகாதெமிக்கு உறுப்பினா்கள் நியமனம்

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசு அறிவித்துள்ள தமிழ் அகாதெமிக்கு 13 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 1:27 pm

புது தில்லி: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசு அறிவித்துள்ள தமிழ் அகாதெமிக்கு 13 உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாகந தில்லி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் தலைவராக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, துணைத் தலைவராக முன்னாள் தில்லி முனிசிபல் கவுன்சிலா் என். ராஜா ஆகியோரை தில்லி அரசு நியமித்துள்ளது.

தலைமை செயலா் (நிதி), செயலா் (தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை) ஆகிய இருவரும் அலுவல் வழியிலான உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், செல்வநாயகம், ஆா். ராகேஷ், ஆா். மணி, ஜி.என்.டி.இளங்கோவன், ஜி.கிரிஷன், ஜி.ஜவாஹா், சுதா ரகுராமன், தீபா முருகேசன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழ் அகாதெமிக்கு செயலா் இன்னும் நியமிக்கப்படவில்லை. அலுவல் வழியிலான உறுப்பினா்களைத் தவிர மற்றவா்கள் 2 ஆண்டு காலம் பதவி வகிக்க உள்ளனா் என தில்லி அரசின் கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை செயலா் சஞ்சய் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.