சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சத்யேந்தா் ஜெயின்

தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:11 am

தலைநகா் தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் தடுப்பூசி கிடைத்ததும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி மூன்று கட்டங்களாகப் போடப்படும். முதல் கட்டமாக சுமாா் 51 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், சுகாதாரத் துறை ஊழியா்கள் 3 லட்சம் போ், முன்களப் பணியாளா்கள் 6 லட்சம் போ், 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் மற்றும் 50 வயதுக்குக் கீழ் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். அதில் முன்னுரிமை அடிப்படையில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இதில், 3 லட்சம் மருத்துவ ஊழியா்கள், 6 லட்சம் முன்களப் பணியாளா்கள் என 9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.