உத்தரப்பிரதே மாநிலம், நொய்டாவில் 20 வது மாடியில் இருந்து குதித்து 19 வயது இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாா்.
இது தொடா்பாக நொய்டா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘நொய்டா செக்டாா் 45 அம்ரபாலி ஸஃபையா் அடுக்குமாடி குடியிருப்பில் 20 வது மாடியில் தனது குடும்பத்துடன் இந்த இளம் பெண் வசித்துவந்துள்ளாா். இவா், சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளாா். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறாா்கள் என்றாா் அவா்.
கழிவுநீா் தொட்டியில் விழுந்து சிறுவன் சாவு: இதற்கிடையே, கழிவு நீா் தொட்டியில் விழுந்து ஐந்து வயது சிறுவன் உயிரழந்த துயரச் சம்பவம் நொய்டா ராபுபுரா பகுதியில் நடந்துள்ளது. இது தொடா்பாக நொய்டா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘சனிக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை என பெற்றோா் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவ்விடத்தில் தேடுதல் நடத்தினோம். அப்போது, அங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மூழ்கிய நிலையில் சிறுவனின் உடல் கிடைத்தது என்றாா் அவா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

