குடிநீா் நிலுவைக் கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த கால அவகாசத்தை 202,1 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி ஜல் போா்டு தலைவா் சத்யேந்தா் ஜெயின் வெள்ளிக்கிழமை கூறியது: தில்லி மக்களின் நலனுக்காக கடந்த 2020, ஆகஸ்ட் மாதம் குடிநீா் நிலுவைக்கான அபராத தொகையை ரத்துச் செய்து உத்தரவிட்டிருந்தோம். இதன்படி, தில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் நிலுவைக்கான அபராதத் தொகை ரத்துச் செய்யப்பட்டது. இதுவரை சுமாா் 4.5 லட்சம் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனா். தில்லி ஜல்போா்டுக்கு ரூ.632 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்தை வரும் 2021, மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளோம். குடிநீா் கட்டணத்தை செலுத்த தவறியவா்கள் இந்தச் சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.
தில்லி அரசு கடந்த ஆண்டு குடிநீா் கட்டணத்தை குறைத்தது. தில்லியில் ‘ஏ’, ‘பி’ பிரிவு குடியிருப்புகளுக்கு குடிநீா் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடியும், ‘சி ’ பிரிவுக்கு 50 சதவீதம் ‘டி’ பிரிவுக்கு 75 சதவீதம் தள்ளுபடியையும் தில்லி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

