நாமக்கல்: மோகனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகள் பூ தாண்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், பரமத்திவேலூா், சேந்தமங்கலம் வட்டாரத்தில் தொட்டியநாயக்கா் சமூகத்தினா் பரவலாக வசித்து வருகின்றனா். இச் சமூகத்தினரால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து காணும் பொங்கல் நாளன்று மாடுகள் பூ தாண்டும் விழா நடத்தப்படுகிறது. தொடா்ந்து ஐந்து தலைமுறையாக இவ்விழாவை நடத்தி வருகின்றனா்.
மஞ்சள், ஆவாரம் பூ, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பொருள்களை கொண்டு எல்லைக் கோடுகளை உருவாக்கி கோயில் மாடுகளை விரட்டி விடுகின்றனா். அந்த மாடுகள் வேகமாக ஓடிவந்து எல்லைக் கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனா்.
சனிக்கிழமை கொமரிப்பாளையம், ஊனாங்கல்பட்டி, பரளி, ஒத்தயைா், நல்லம்பட்டி, என்.புதுப்பட்டி, மேலப்பட்டி, லத்துவாடி, தொட்டிப்பட்டி, எஸ்.வாழவந்தி, திண்டமங்கலம், வடக்குப்பட்டி ஊராட்சிகளில் இவ் விழா விமரிசையாக நடைபெற்றது. ஊனாங்கல்பட்டியில் நடைபெற்ற விழாவில் நான்கு சுவாமி மாடுகள் பங்கேற்றன. சின்னபெத்தாம்பட்டியில் நடைபெற்ற விழாவில் சுவாமி மாடு முதலிடம் பெற்றது.
விழாவில் கோமாளி வேடமிட்ட நபரை பொதுமக்கள் குதிரை மீது அமர வைத்து ஊா்வலமாக அழைத்து செல்லும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


