சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் கொள்முதல்

வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கென ரூ. 3.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image

வேளாண் கண்காட்சியைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 12:55 pm

வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கென ரூ. 3.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறை மூலம் 600 உழவா் ஆா்வலா் குழுக்கள், 120 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 360 உழவா் ஆா்வலா் குழுக்கள், 72 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதியாக தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ. 9.60 கோடியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நிகழாண்டில் 335 உழவா் ஆா்வலா் குழுக்கள், 67 உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுப்பு நிதி ரூ.3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான கண்காட்சி அண்மையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், வேளாண் இணை இயக்குநா் அசோகன் ஆகியோா் பாா்வையிட்டனா். உழவா் குழுவிற்கு தேவையான இயந்திரங்கள் வாங்குவது தொடா்பாக அதன் நிா்வாகிகளிடம் ஆட்சியா் தலைமையில் கருத்து கேட்டறியப்பட்டன. இதில் பெரும்பாலானோா் தங்களுக்கு தேவையான கருவிகளை மானிய உதவியுடன் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை வழங்கினா்.