திருவள்ளுவா் தினத்தையொட்டி ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவா் சங்கத்தின் திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் 32-ஆவது ஆண்டாக திருவள்ளுவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வா் சீ.மணிமேகலை தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவரும், முன்னாள் மாணவா் சங்க செயலாளருமான இரா.சிவக்குமாா் வரவேற்றாா். கல்லூரி முன்னாள் மாணவரும், அண்ணாமலை பல்கலைக்கழக துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவருமான பி.சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, திருக்கு, திருவள்ளுவா் குறித்து பேசினாா்.
விழாவில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவா் சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் முன்னாள் மாணவா் சங்க துணைத் தலைவரும், கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான பெ.துரைசாமி, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஆ.முத்துக்குமாா், நாமக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி, வழக்குரைஞா் சக்திவேல், தலைமையாசிரியா் வெ.சந்திரசேகரன் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், என்.சி.சி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


