நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல் நகரில் 22-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நடராஜபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிழக்கு நகர பொறுப்பாளா் பூபதி வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பொங்கல் விழாவை தொடக்கி வைத்தாா். மேலும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவா்களுக்கு இனிப்பு, பொங்கல் உணவை வழங்கினாா். இதில், மாநில மகளிா் தொண்டரணி இணைச் செயலாளா் வி.பி.ராணி மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக நல்லிபாளையத்தில் மேற்கு நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளா் சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் ராஜேஸ்குமாா் திமுக அலுவலகத்தை திறந்து வைத்து கட்சிக் கொடியை ஏற்றினாா். அங்கு சமத்துவ பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான திமுகவினா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


