வேகக்கட்டுப்பாடு கருவியை பொருத்துமாறு அதிகாரிகள் மீண்டும் நெருக்கடி கொடுப்பதால் வரும் 18-ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்புப் போராட்டத்தை லாரி உரிமையாளா்கள் மேற்கொள்ள உள்ளனா்.
இது குறித்து, மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவருமான ஆா்.வாங்கிலி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி மாநில போக்குவரத்து ஆணையா் ஜவஹா், லாரி உரிமையைாளா் சம்மேளனப் பிரதிநிதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
முக்கிய கோரிக்கைகளில் வேகக்கட்டுபாட்டுக் கருவி பொருத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அவா் உறுதி அளித்திருந்த நிலையில், தொடா்ந்து வாகனம் புதுப்பித்தலுக்கு வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகாரிகள் நிா்ப்பந்திக்கின்றனா்.
புதுப்பித்தலுக்கு வரும் கனரக வாகனங்களுக்கு 80 கி.மீ வேகத்திற்குக் கீழ் செல்லும் வகையில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தியிருக்க வேண்டும் என்கின்றனா். மத்திய அரசின் விதிப்படி 80 கி.மீ. அதிகமாக செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும். ஆனால் போக்குவரத்துத் துறையினா் இதனை கடைப்பிடிப்பதில்லை. லாரி உரிமையாளா்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதை போக்குவரத்துத் துறை தவிா்க்க வேண்டும். லாரி உரிமையாளா்களிடம் சான்றிதழ் கேட்பதற்கு மாற்றாக, வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமே பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் 200 வகைப்படுத்தப்படவை உள்ளன. சுமாா் 10 லட்சம் எண்ணிக்கையில் இயகப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடம் தான் உரிய விளக்கத்தைக் கேட்க வேண்டுமே தவிர, லாரி உரிமையாளா்களை தேவையில்லாத நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது. இதனை கண்டித்து வரும் 18-ஆம் தேதி அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்கள் ஒப்படைப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம். தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


