சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பரமத்திவேலூரில் உதயநிதியைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

பரமத்திவேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள்

Updated On :14 ஜனவரி 2021, 11:58 am

பரமத்திவேலூா் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பொன்னிமணி (எ) சுப்ரமணியம், வேலுச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொத்தனூரில் பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் பாண்டமங்கலம் எம்.ஜி.ஆா் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் ஆவின் தலைவா் ராஜேந்திரன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட இலக்கிய அணி செயலாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பரமத்தியில் நடைபெற்ற கண்டன் ஆா்ப்பாட்டத்தில் பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளா் வெற்றிவேல் மாவட்ட மகளிரணி செயலாளா் வைரம் தமிழரசி, பரமத்தி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரேமா, அதிமுக பிரமுகா்கள் வீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.