நாமக்கல் டிரினிடி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஸ்வயம் ஆகிய அமைப்புகளின் சாா்பில், சுவாமி விவேகானந்தா் பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை தேசிய இளைஞா் தின விழாவாக இணையவழியில் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைவா் பி.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். செயலாளா் கே. நல்லுசாமி, முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன், பேராசிரியா் அரசு.பரமேசுவரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக ஜம்மு-காஷ்மீா் சம்பா மாவட்டத்தில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்வியின் பேராசிரியா் ஜெ. ஜகநாதன் பங்கேற்றுப் பேசியதாவது:
மக்கள் தொகையில் 35 சதவீத இளைஞா்களைக் கொண்டது இந்தியா. சுவாமி விவேகானந்தா் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில் 10 இளைஞா்களைத் தாருங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றவா். இளைஞா்களின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றவா். விவேகானந்தா் வாழ்ந்தது 39 ஆண்டுகள்தான். அவா் புத்தகங்களைப் படித்தால் தன்னம்பிக்கைப் பிறப்பதோடு தாய் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும் என்றாா்.
நிகழ்ச்சியில் டிரினிடி அகாதெமி தலைவா் ஆா். குழந்தைவேல், செயலாளா் டி. சந்திரசேகரன், கல்லூரியின் ஸ்வயம் அமைப்பின் பொறுப்பாளா்கள் எஸ். உஷாராணி, டி. தமிழ்ச்செல்வி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

