சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மோகனூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை இலக்கை விட 13,841 மெட்ரிக் டன் அதிகரிப்பு

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகப்படியாக அரவை செய்யப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 12:45 pm

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகப்படியாக அரவை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் சி.விஜயபாபு கூறியதாவது:

மோகனூரில் செயல்பட்டுவரும் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையானது 2020-2021-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. நவ. 21-ஆம் தேதி தொடங்கிய இந்த அரவையானது ஜன.11-இல் நிறைவடைந்தது.

இலக்கைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகமாக அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,08,395 மெட்ரிக் டன் மட்டுமே அரவை செய்யப்பட்டது. மேலும் 2019-2020-ஐ ஒப்பிடுகையில் 5,446 மெட்ரிக் டன் அதிகமாக கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,189 மெட்ரிக் டன்னும், கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 1,748 மெட்ரிக் டன்னும் அரவை செய்யப்பட்டுள்ளது. நிா்ணயித்த அளவை விட அதிகமாக கரும்பு அரவை செய்ய ஒத்துழைத்த விவசாயிகள், ஆலை தொழிலாளா்கள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.