நாமக்கல்லில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன் மாவட்ட தலைவா் எம்.பழனிசாமி வரவேற்றாா். மாநில இணைச் செயலாளா் கே.ஆா்.பாஸ்கரசிவம் முன்னிலை வகித்தாா். அகில இந்திய இணைச் செயலாளா் ஜி.செல்வகபில சிவாச்சாரியாா் தலைமை வகித்தாா். மாநில தலைவா் எஸ்.கீா்த்திவாசன் சிறப்புரை ஆற்றினாா். கூட்டத்தில் நிா்வாகிகள் பதவியேற்பு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
திருக்கோயில் அா்ச்சகா்களுக்கு ரூ.1000 கருணைத் தொகை, ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. திருவிழாக்களை அந்தந்த ஆலய அா்ச்சா்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க அரசு உத்தரவிட வேண்டும்.
பூஜை விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அா்ச்சகா்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளா் ஆா்.சந்திரமோகன், செயலாளா் திருஞானசம்பந்தம், பொருளாளா் சுந்தரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


