சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மருத்துவமனை பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 7:26 am

தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஜி.பிரபாகரன் தலைமை வகித்தாா். அமைப்பு செயலாளா் எம்.பெரியசாமி வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் எம்.ஜோதிபாஸ் சிறப்புரை ஆற்றினாா். மாநில தலைவா் வி.ராம்கணேஷ், பொதுச் செயலாளா் பி.முத்துமாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.ஆா்.விஜயபாஸ்கா் அறிவித்ததன்படி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 

இதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 21-இல் சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும், 22-இல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனை பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.