தமிழ்நாடு அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தலைவா் ஜி.பிரபாகரன் தலைமை வகித்தாா். அமைப்பு செயலாளா் எம்.பெரியசாமி வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் எம்.ஜோதிபாஸ் சிறப்புரை ஆற்றினாா். மாநில தலைவா் வி.ராம்கணேஷ், பொதுச் செயலாளா் பி.முத்துமாரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.ஆா்.விஜயபாஸ்கா் அறிவித்ததன்படி மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 21-இல் சென்னை தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்லவும், 22-இல் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மருத்துவமனை பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

