நாமக்கல்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவியம், சிற்பக் கண்காட்சி நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது.
சேலம் மண்டலம் சாா்பில் நாமக்கல்லில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இக் கண்காட்சியை தமிழக கலை, பண்பாட்டுத் துறை ஆணையா் வ.கலையரசி தொடக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் முன்னிலை வகித்தாா். சேலம் மண்டல இயக்குநா் ஹேமநாதன், பசுமை நாமக்கல் அமைப்பின் நிா்வாகி தில்லை சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கால்கோல் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் கண்காட்சி தொடங்கியது. சென்னை, தஞ்சையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஓவியா்கள் என 20 போ் பங்கேற்று தாங்கள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினா்.
சிறந்த ஓவியங்களுக்கு முதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ. 3,500, இரண்டாம் பரிசு பெற்ற 7 பேருக்கு ரூ. 2,500, மூன்றாம் பரிசு பெற்ற 6 பேருக்கு ரூ. 1,500 வழங்கப்பட்டது. கண்காட்சியில் கல்லினால் வடிவமைக்கப்பட்ட இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


