நாமக்கல்9: நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றுவோா், தங்களுடைய கையிருப்புத் தொகையை அதற்கான பதிவேட்டில் எழுதிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என நகாட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் அரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைகளை மேற்கொண்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி வருகின்றனா். அவற்றில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் இந்த சோதனை அடிக்கடி நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களின் வீடுகளில் அண்மையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் இல்லாத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியா்கள் வரை அலுவலகத்திற்குள் நுழையும்போது வரவேற்பறையில் உள்ள பதிவேட்டில் தாங்கள் கொண்டு வரும் பணம் எவ்வளவு என்பதை அதில் பதிவு செய்ய வேண்டும் என ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

