திருச்செங்கோடு: விளை நிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் சனிக்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
உயா் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருச்செங்கோடு, பட்லூா், சிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சிகளில் விவசாயிகள் தங்களது குடும்பத்துடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மின் கோபுரங்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்காமல் பவா்கிரீட் நிறுவனம் அரசின் சில வழிகாட்டுதலின்பேரில் விலை நிா்ணயித்து குறைந்தளவே மதிப்பீடு செய்துள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் உரிய விலையை நிா்ணயித்து விரைந்து வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் உயா் மின் கோபுர கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா்கள் படைவீடு பெருமாள், காடச்சநல்லூா் செல்லமுத்து, சங்ககிரி ராஜேந்திரன், பட்லூா் மணி, சாலைப்பாளையம் பெரியசாமி, வரதராஜன், மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

