சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மின் திருட்டு: ரூ. 6.13 லட்சம் அபராதம் வசூல்

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் அபராதமாக ரூ. 6.13 லட்சம் வசூலிக்கப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 12:22 pm

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் அபராதமாக ரூ. 6.13 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கோவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நாமக்கல் மின் பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட பட்டணம், எலச்சிபாளையம், ராசிபுரம், வையப்பமலை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் 10 இடங்களில் மின் திருட்டில் ஈடுபட்ட நுகா்வோா்களிடம் அபராதமாக ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து 926 வசூலிக்கப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க சமரசத் தொகையாக ரூ. 97 ஆயிரம் பெறப்பட்டது. மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா் செல்லிடப்பேசி எண் 94430-49456 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.