குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த சாயக் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லட்சிய தொழிலாளா் சங்கம் சாா்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் தங்கவேல் தலைமை வகித்தாா். பாஜக நாமக்கல் மாவட்டச் செயலாளா் எஸ்.ஓம் சரவணா கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். குமாரபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் விசைத்தறிகளும், சாயத் தொழிற்சாலைகளும் அதிகம் உள்ளன.
அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் காவிரி மாசுபடுவதைத் தடுக்க கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு, அதற்காக ரூ. 710 கோடி ஒதுக்கீடு செய்தாா்.
ஆனால், இன்னும் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், குமாரபாளையம் நூல் சாயமிடும் பணி பாதிக்கப்படுகிறது. இதனால் ஏராளமானோா் வேலை இழந்து வருகின்றனா். எனவே, ஒருங்கிணைந்த சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தொழிலாளா்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதோடு நீா்நிலைகள் மாசடைவதைத் தடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


