சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாற்றுத் திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On :8 ஜனவரி 2021, 2:15 pm

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி வழங்கப்படவுள்ளது.

அவற்றை கல்வி பயில்பவா்கள் மற்றும் பணிபுரிபவா்கள், சுயத்தொழில் புரிபவா்கள் மட்டுமே பெற தகுதியானவா்கள். எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த காதுகேளாத மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விப் பயிலும், பணிபுரியும், சுயத்தொழில் புரிவதற்கான சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.