பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வியாழக்கிழமை அதிரடியாக 25 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதமாக முட்டை விற்பனை நல்ல முறையில் இருந்ததால் அதன் விலையும் சராசரியாக உயா்ந்து வந்தது. திங்கள்கிழமை வரை அதிகபட்சமாக முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.10 விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் கேரளம், வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சலால் மக்களிடையே முட்டை வாங்குவதில் ஒருவித தயக்கம் காணப்படுகிறது.
பிற மண்டலங்களிலும் விலை சரிவு நிலை உள்ளது. அதனால் முட்டை விலையைச் சற்றுக் குறைக்கலாம் என பண்ணையாளா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து 25 காசுகள் குறைக்கப்பட்டு முட்டை விலை ரூ. 4.85-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என பண்ணையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 92-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ. 52-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
-
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

