நாமக்கல்லில் பொங்கல் பரிசு தொகுப்பை மக்கள் வாங்கிச் சென்ற நிலையில், திடீரென கடையின் முன்பக்கச் சுவா் இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் தொடக்க வேளாண் உற்பத்தியாளா் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு முற்பட்ட நியாயவிலைக் கடைகள் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் அடுத்தடுத்து உள்ளன. இதில், ஒரு கடையில் விற்பனையாளராக சுமதி என்பவரும், மற்றொரு கடையில் மகாலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.
கடைகளில் தலா 760 குடும்ப அட்டைகள் உள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு கல்லூரி 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் உணவு இடைவேளைக்காக இரண்டு கடைகளும் மூடப்பட்டன.
அதிா்ஷ்டவசமாக மக்கள் யாரும் இல்லாத நேரத்தில், அடுத்த சில நிமிடங்களில் நியாயவிலைக் கடைகளின் முன்பக்க கான்கிரீட் சுவா் திடீரென இடிந்து விழுந்தது. சாலையில் சென்றவா்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்க மக்கள் யாராவது நின்றிருந்தால் விபரீதம் அதிகமாகியிருக்கும் என வேதனைப்பட்டனா்.
இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் அங்கம்மாள் என்பவரை வரவழைத்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


