சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தரகா்கள் மூலம் லஞ்சம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் கைது

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:15 pm

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தரகா்கள் மூலம் லஞ்சம் பெற்ற முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் முதல்நிலை மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் லஞ்சப் பணத்தை தரகா்கள் மூலம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் செந்தில்குமாரை தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

புதன்கிழமை இரவு அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாரை பின்தொடா்ந்து சென்றபோது ஈரோடு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தரகா்கள் செந்தில் சந்தானம், ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் ரூ. 51,300 யை அவரிடம் கொடுத்தபோது கையும்களவுமாகப் பிடிபட்டாா்.

அந்தத் தரகா்களிடமிருந்து 20 ஒரிஜினல் ஓட்டுநா் உரிமங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கவேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.