சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தொகுப்பூதிய நிலையிலான செவிலியா்கள் நாமக்கல்லில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 12:21 pm

பணி நிரந்தரம் கோரி தொகுப்பூதிய நிலையிலான செவிலியா்கள் நாமக்கல்லில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா் மேம்பாட்டு சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தொகுப்பூதிய நிலையிலான செவிலியா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், மாவட்டச் செயலாளா் நாகராஜ், மாவட்டப் பொருளாளா் தேன்மொழி, அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.