பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தேங்காய் வரத்தும் குறைவு, விலையும் சரிவடைந்துள்ளது.
பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 922 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 37.20,குறைந்தபட்சமாக கிலோ ஒன்று ரூ.22.15, சராசரியாக கிலோ ஒன்று ரூ. 25.12 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் 92 ஆயிரத்து 145 க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,247 தேங்காய்கள் மட்டும் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 31, குறைந்தபட்சமாக ரூ. 22, சராசரியாக ரூ. 26-க்கும் ஏலம் போனது. மொத்தம் 10 ஆயிரத்து 428 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
குறைந்த அளவே தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்த போதிலும் வியாபாரிகள் அதிக அளவில் வராததால் தேங்காய் விலை சரிவடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

