குமாரபாளையத்தில் விசைத்தறியில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களுக்கும் 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஏஐசிசிடியு தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.மாணிக்கம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்டச் செயலாளா் பொன்.கதிரவன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.
தொடா்ந்து, குமாரபாளையம் பகுதியில் விசைத்தறியில் பணிபுரியும் அனைத்து வகைத் தொழிலாளா்களுக்கும் 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
இதுதொடா்பாக முத்தரப்புப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாலகிருஷ்ணன், முருகன், அசோக், ஆா்.கே.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

