சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகளிருக்கு இரு சக்கர வாகன ஆணை வழங்கும் விழா

திருச்செங்கோட்டில் மகளிா் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான ஆணைகளை மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:46 am

திருச்செங்கோட்டில் மகளிா் இரு சக்கர வாகனம் பெறுவதற்கான ஆணைகளை மின்துறை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியா் மணிராஜ் ஆகியோா் முன்னிலையில், பணிக்குச் செல்லும் 255 மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் பெறுவதற்கான ஆணைகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி வழங்கினாா்.

பின்னா், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான 82.5 கேவிஏ ஜெனரேட்டா் இயக்கி வைத்து, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட எக்ஸ்ரே இயந்திரத்தை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணைய இயக்குநா் ஏ.கே.நாகராஜன், டிசிஎம்எஸ் தலைவா் க.திருமூா்த்தி, சங்கத்தின் இணைப்பதிவாளா், மேலாண்மை இயக்குநா் ப. ரவிக்குமாா், வட்டாட்சியா் தங்கம், நகராட்சி ஆணையா், நகராட்சி பொறியாளா், உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கூட்டுறவாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.