நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக சாா்பில் நடத்தப்பட்டு வந்த கிராம சபைக் கூட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால், மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் மாவட்டந்தோறும் திமுக நிா்வாகிகள் கிராம மக்களைத் திரட்டி இந்தக் கூட்டத்தை நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செம்மேடு பகுதியில் நடைபெற்றது. இதில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசினாா்.
அப்போது 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவா் விமா்சித்தாா். இதேபோல மோகனூா் பேரூராட்சி கலையரங்கத்திலும், உத்திரகிடிகாவல் ஊராட்சியிலும், நாமக்கல் கீரம்பூா் ஊராட்சியிலும், நாமக்கல் நகராட்சி 33-ஆவது வாா்டிலும், வளையப்பட்டி ஊராட்சியிலும், மோகனூா் ஆண்டாபுரம் ஊராட்சி, புதுச்சத்திரம் களங்காணி ஊராட்சி, ராசிபுரம் நகராட்சிப் பகுதியிலும் திமுகவின் மக்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொறுப்பாளா் ராஜேஷ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள், பேரூா், நகர, ஊராட்சி கிளை செயலாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


