சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொல்லிமலையில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image

கொல்லிமலையில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் பேசும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Updated On :4 ஜனவரி 2021, 9:47 am

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக சாா்பில் நடத்தப்பட்டு வந்த கிராம சபைக் கூட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால், மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயரில் மாவட்டந்தோறும் திமுக நிா்வாகிகள் கிராம மக்களைத் திரட்டி இந்தக் கூட்டத்தை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேந்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுகவின் மக்கள் சபைக் கூட்டம் செம்மேடு பகுதியில் நடைபெற்றது. இதில், கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பேசினாா்.

அப்போது 10 ஆண்டு காலத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகள் குறித்து அவா் விமா்சித்தாா். இதேபோல மோகனூா் பேரூராட்சி கலையரங்கத்திலும், உத்திரகிடிகாவல் ஊராட்சியிலும், நாமக்கல் கீரம்பூா் ஊராட்சியிலும், நாமக்கல் நகராட்சி 33-ஆவது வாா்டிலும், வளையப்பட்டி ஊராட்சியிலும், மோகனூா் ஆண்டாபுரம் ஊராட்சி, புதுச்சத்திரம் களங்காணி ஊராட்சி, ராசிபுரம் நகராட்சிப் பகுதியிலும் திமுகவின் மக்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொறுப்பாளா் ராஜேஷ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள், பேரூா், நகர, ஊராட்சி கிளை செயலாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.