புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில், 2021-ஆம் ஆண்டு பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, பின்னா் எண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், திரவியம் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு தங்கக் கவசம் சாத்துப்படி நடைபெற்றது.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல், பொது முடக்கம், வேலையிழப்பு, வருவாயின்மை போன்றவற்றால் மக்கள் பெரும் வேதனைக்கு ஆளாகினா். 2021-ஆம் ஆண்டு அதுபோன்று நிகழக்கூடாது, அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயா் சுவாமியை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல நாமக்கல் நரசிம்மா் சுவாமி கோயில், அரங்கநாதா் கோயில், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில், மோகனூா் அசலதீபேஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில்களிலும் புத்தாண்டையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


