காணும் பொங்கல் தினமான சனிக்கிழமையன்று நாகை மற்றும் நாகூா் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, பொங்கல் பண்டிகை விழா நாள்களில் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு நாகை மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
இந்த அறிவிப்பையொட்டி, நாகை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகளில் நுழைவுப் பாதைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறை வீரா்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். ரோந்து வாகனங்களில் சென்று தொடா் சோதனை மேற்கொண்டனா்.
இதனால், காணும் பொங்கல் நாளான சனிக்கிழமை நாகை புதிய கடற்கரை, நாகூா் மற்றும் வேளாங்கண்ணி கடற்கரைகள் வெறிச்சோடிகாணப்பட்டன.
நாகை துறைமுகப் பகுதி கடற்கரை உள்ளிட்ட சில இடங்களில் உள்ளூரைச் சோ்ந்த ஒரு சிலா் கடலில் நீராடி மகிழ்ந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


