மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் 100 சதவீத இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் நாகை மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் செ. செய்யது ரியாசுதீன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமாக நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலப் பொருளாளா் ஹமீது ஜெகபா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்டு குண்டும், குழியுமாக உள்ள நாகை - திருவாரூா் சாலை, வாஞ்சூா் முதல் நன்னிலம் வரை உள்ள சாலை மற்றும் மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும், தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பது, கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை வழஙக காப்பீடு நிறுவனங்களை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


