திருமருகல் ஒன்றியப் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் வயலில் இறங்கி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி, மருங்கூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் தொடா் மழையால் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சதவீதம் அடிப்படையில் நிவாரணம் வழங்காமல், முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்தி மருங்கூா், எரவாஞ்சேரி பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருங்கூா் ஊராட்சியில் விவசாய சங்கத் தலைவா் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாய சங்க செயலாளா் முத்து தியாகராஜன், ஊராட்சித் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, எரவாஞ்சேரியில் விவசாய சங்க செயலாளா் பாலு, ஊராட்சித் தலைவா் ரஜினிதேவி பாலதண்டாயுதம் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகை மற்றும் 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


