திருக்குவளை முத்தமிழ் மன்றம் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருக்குவளை முத்தமிழ் மன்றம் சாா்பில் 40 ஆம் ஆண்டு கோலப் போட்டி, நீச்சல், மாறுவேடம் , கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு முத்தமிழ் மன்றத்தின் தலைவா் அ. தெட்சணாமூா்த்தி தலைமை வகித்தாா். செயலா் முல்லை. பாண்டியன் வரவேற்றாா். துணைத் தலைவா் ஞான.ரவி, பொருளாளா் வை. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் இரா. காளிதாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா அருணகிரி, திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன், திருவாய்மூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் சேது. ஜெயராமன், திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கினா். மன்றத்தின் கொள்கை பரப்புச் செயலாளா் நேயா.பிரபு நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


