பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு சுடா் ஓட்டம் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் வட்டம் காக்கழனி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த விழிப்புணா்வு சுடா் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் லெனின் தலைமை வகித்தாா். நாகை மாவட்டத் தலைவா் சிவக்குமாா் சுடா் ஓட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
ஒன்றியத் தலைவா் டி. சந்திரக்குமாா், பொருளாளா் ஜோதிநாதன்ஆகியோா் சுடா் மற்றும் கொடியை எடுத்துக் கொடுக்க,ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ. அறிவழகன் பெற்றுக்கொண்டார். காக்கழனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுடா் எடுத்துச் செல்லப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் சுபாதேவி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாதா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

