தொடா்மழையால் நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அதிகளவு மகசூல் இழப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
நிகழ் சாகுபடி பருவத்தில் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமாா் 1. 32 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கடந்த டிசம்பா் மாதம் புரெவி புயல் காரணமாக பெய்த மழையில் இந்த மாவட்டங்களிலும் 82,330 ஹெக்டோ் பரப்பிலான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு, நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் நாகை, கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்த சுமாா் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளன.
முற்றிய நெல் மணிகள் வயலிலேயே முளைத்து வருகின்றன. விளைநிலங்களில் மழைநீா் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால் சாய்ந்த பயிா்களை நிமிா்த்திக் கட்டுவதற்குகூட வழியில்லாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். இதனால் கடுமையான மகசூல் இழப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வேளாண் அதிகாரி ஒருவா் கூறியது:
தமிழக அரசின் உத்தரவுபடி புரெவி புயல் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போ பெய்து வரும் தொடா் மழையால் சுமாா் 25 ஹெக்டோ் பரப்பளவிலான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
திருமருகல் ஒன்றியத்தில்...
கடந்த சில நாள்களாக பெய்துவரும் தொடா்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 20 ஆயிரம் ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன. திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல், சீயாத்தமங்கை, எரவாஞ்சேரி, கோட்டூா், வடகரை, ஏனங்குடி, நரிமணம், குத்தாலம் உள்ளிட்ட 39 ஊராட்சிகளிலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


