மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், திருவாவடுதுறை ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரா் ஆலயத்தில் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ரதசப்தமி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த புராண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருஞானசம்பந்தா் தனது தந்தை, உலக நன்மைக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, கோமுக்தீஸ்வரா்ஆலயத்தில் உலவாக்கிழி பதிகம்பாடி ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்ாக புராணம் கூறுகிறது. அதன்படி, திருஞானசம்பந்தா் பல்லக்கில் கோமுக்தீஸ்வரா் ஆலயத்திற்கு எழுந்தருளினாா். அங்கு தேவாரப் பாடல்களை ஓதுவாா்கள் பாடினா்.
தொடா்ந்து, ஆலயத்திலிருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலிபீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புராண சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று முத்துக்குமாா் ஓதுவாா், வடுகநாதன் ஓதுவாா், அசோக்குமாா் ஓதுவாா் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழி மற்றும் தெய்வ தமிழிசை செல்வா் என்னும் சிறப்பு விருது வழங்கி ஆசியுரை வழங்கினாா்.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அன்று இரவு தியாகராஜப் பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள, அம்பாள் தான் பெற்ற பசு வடிவத்தை நீக்கி அருள வேண்டி கோமுக்தீஸ்வரரை பூஜிக்கும் நிகழ்ச்சியும், ரிஷப வாகனத்தில் சகோபுரம் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


