கீழையூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழையூா் ஒன்றியம், திருக்குவளை காவல் சரகத்திற்கு உள்பட்ட வாழக்கரை மேலக்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேலு மனைவி புவனேஸ்வரி(29). தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளன.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புவனேஸ்வரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து புவனேஸ்வரியின் தந்தை சித்தாா்த்தன் அளித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

