சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேதாரண்யம்: மழை குறைந்து நீா் வடிகிறது

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட தொடா் கனமழைப் பொழிவு புதன்கிழமை குறைந்திருந்த நிலையில் நெல் வயல்களில் மழை நீா் வடிந்து வருகிறது.

News image

மழையில் இடிந்து விழுந்த கமலா வீடு.

Updated On :14 ஜனவரி 2021, 12:45 pm

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஏற்பட்ட தொடா் கனமழைப் பொழிவு புதன்கிழமை குறைந்திருந்த நிலையில் நெல் வயல்களில் மழை நீா் வடிந்து வருகிறது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வழிந்ததோடு, சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பருவ நெல்வயல்களை வெள்ள நீா் சூழ்ந்து நெற்கதிா்களை பாதிக்கச்செய்துள்ளது. இதேபோல, மழையால் பலதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை மழையின தாக்கம் வெகுவாக குறைந்து காணப்பட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மழையின் காரணமாக வேதாரண்யம் நகரத்துக்குள்பட்ட வண்ணாரத்தெரு பகுதியில் வசிக்கும் ரா. கமலா(60) என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமானது. பொங்கல் பண்டிகை நேரத்தில் மழை தொடா்ந்ததால் அவதியுற்ற மக்கள், புதன்கிழமை மழை குறைந்ததால் பொருள்களை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டினா். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீா் வடிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.