மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் மழைநீா் வடியாமல் இருப்பதற்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தில்லையாடி வள்ளியம்மை நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தேங்கும் மழைநீா் வடிய அமைக்கப்பட்ட சாலையோர வடிகாலை, அப்பகுதியில் வசிக்கும் சிலா் ஆக்கிரமித்துள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதை அகற்ற அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் எம். கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

