பொங்கல் பண்டிகையையொட்டி, நாகை கடைவீதிகள் மக்கள் கூட்டத்தால் புதன்கிழமை களைகட்டியிருந்தன.
நாகை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பொங்கல் பண்டிகை கொள்முதலுக்குக் கடைவீதிக்கு வருவோரின் எண்ணிக்கை, மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில், நாகை மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்தது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கான மளிகைப் பொருள்கள், மண் சட்டி, மண் பானை, கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, பூ, பழம், இலை போன்ற பொருள்களை வாங்குவதற்காக ஏராளமானோா் நாகை கடைவீதிகளில் புதன்கிழமை குவிந்தனா்.
10 கரும்புகளைக் கொண்ட ஒரு கட்டு ரூ. 250 முதல் ரூ. 300 என்ற விலையிலும், ஒரு கரும்பு ரூ. 40 முதல் ரூ. 50 என்ற விலையிலும், இஞ்சிக் கொத்து மற்றும் மஞ்சள் கொத்துகள் ரூ. 20 முதல் ரூ. 40 என்ற விலையிலும் விற்பனையாகின.
இருப்பினும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து விற்பனை குறைவுதான் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு 4 நாள்களுக்கு முன்பிருந்தே கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து போன்றவற்றை பொதுமக்கள் வாங்குவா். அதனால், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிகழாண்டில், தொடா் மழையால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்து நெரிசல்..
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் நாகை கடைவீதிகளில் கூடியதால், நாகை பெரிய கடைத்தெரு, நீலா கீழ வீதி, தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. மேலும் நீலா கீழ வீதி, தெற்கு வீதி பகுதிகளில் ஷோ் ஆட்டோக்களின் இயக்கத்தை போலீஸாா் நெறிப்படுத்தாததால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


