நாகையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு (சீ விஜில்) ஒத்திகையில், போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 6 போ் நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் புதன்கிழமை பிடிக்கப்பட்டனா்.
கடல் மாா்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகள், மும்பை தாஜ் ஹோட்டலில் அடைக்கலம் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் சிபிசிஎல், பிள்ளைப்பெருமாள்நல்லூா் மின் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவதற்காக 4 படகுகளில் 6 போ் அனுப்பப்பட்டிருந்தனா்.
நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ராஜா தலைமையில், சிறப்பு சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் தலைமைக் காவலா்கள் அடங்கிய குழுவினா் கடலில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, றையாறு, நாகூா், வேளாங்கண்ணி கடல் பகுதிகளில், போலி வெடிகுண்டுகளுடன் படகுகளில் வந்த 6 பேரையும் மடக்கிப் பிடித்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


