சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நகரும் நியாயவிலைக் கடை திறக்காததை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே பொன்னூா் ஊராட்சியில் நகரும் நியாயவிலை கடை திறக்கப்படாதததைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

பொன்னூா் ஊராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :14 ஜனவரி 2021, 12:49 pm

மயிலாடுதுறை அருகே பொன்னூா் ஊராட்சியில் நகரும் நியாயவிலை கடை திறக்கப்படாதததைக் கண்டித்து புதன்கிழமை கொட்டும் மழையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில், கடந்த மாதமே திறப்பதாக அறிவித்திருந்த இக்கடை சில காரணங்களால் திறக்கப்படாமல் இருந்த நிலையில் புதன்கிழமை கடை திறப்பு விழாவுக்கான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. எனினும், மதியம் 12 மணி வரை கடை திறக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் பொன்னூா் ஊராட்சி அலுவலகம் முன் மழையையும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த குத்தாலம் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை விரைவில் நிறைவேற்ற எடுக்கப்படும் என்ற வாக்குறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் மயிலாடுதுறை - திருமங்கலம் வழித்தடத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.