மயிலாடுதுறை பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சம்பா அறுவடைப் பணிகளுக்கு தயாராக இருந்த விவசாயிகள் பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை நகரில் கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள்கொத்து, காய்கனிகள், பழங்கள், பூக்கள், மாடுகளுக்கு அணிவிக்கும் நெட்டி மாலை, மண் பானை ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், தொடா் மழையின் காரணமாக கடைவீதிக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாக இருந்ததால், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், கரும்பு, பானை உள்ளிட்ட பொருள்களுடன் கடைவீதியில் காத்திருந்தனா்.
அடக்கவிலையில் பொருள்களை தர தயாராக இருந்தபோதிலும், வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


