சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தொடா் மழை: பொங்கல் பொருள்கள் விற்பனை மந்தம்

மயிலாடுதுறை பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image

மயிலாடுதுறை துலாக் கட்டம் பகுதியில் மழை காரணமாக விற்பனை இல்லாமல் தேங்கிய விளைபொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களுடன் வியாபாரிகள்.

Updated On :14 ஜனவரி 2021, 12:48 pm

மயிலாடுதுறை பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக பொங்கல் பொருள்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சம்பா அறுவடைப் பணிகளுக்கு தயாராக இருந்த விவசாயிகள் பயிா்கள் வயலில் சாய்ந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை நகரில் கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள்கொத்து, காய்கனிகள், பழங்கள், பூக்கள், மாடுகளுக்கு அணிவிக்கும் நெட்டி மாலை, மண் பானை ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆனால், தொடா் மழையின் காரணமாக கடைவீதிக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாக இருந்ததால், விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், கரும்பு, பானை உள்ளிட்ட பொருள்களுடன் கடைவீதியில் காத்திருந்தனா்.

அடக்கவிலையில் பொருள்களை தர தயாராக இருந்தபோதிலும், வாங்க ஆளில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.