சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சூறாவளியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம்

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

News image

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன்.

Updated On :14 ஜனவரி 2021, 12:49 pm

மயிலாடுதுறை அருகே திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதன்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.

பாண்டூா் ஊராட்சியில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமாா் 100 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும், 500 ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்தன. இந்நிலையில், சூறாவளியால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன் சந்தித்து, புடவை, போா்வை, கைலி, பாய் உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினாா். இதில், மயிலாடுதுறை அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.