நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, மயிலாடுதுறை, சீா்காழி, வேதாரண்யம் அரசு மருத்துவமனைகள், ஆக்கூா், வேளாங்கண்ணி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனை என 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சுகாதாரத் துறை அலுவலா்களுடனான சிறப்பு ஆலோசனைக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா்.
கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இடையூறு இல்லாமல் நடத்தவும், தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கான மருத்துவக் கண்காணிப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகுசெய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 7 மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

