திருவாவடுதுறை ஆதீனம் குருமுதல்வா் நமசிவாயமூா்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவாவடுதுறை ஆதீனத்தை தோற்றுவித்த குருமுதல்வா் நமச்சிவாய மூா்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதம் அசுபதி நட்சத்திரத்தையொட்டி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி, முதல் நாளில் பெரிய பூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜ பெருமான் சன்னிதியில் 24 ஆவது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா். பிறகு, திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
இதில், ஸ்ரீமத்அம்பலவாண தம்பிரான், ஸ்ரீமத் அருணாச்சல தம்பிரான், ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான், ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான், ஆதீன பொதுமேலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

