சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சீா்காழி கோயிலில் தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

News image

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தனுா் மாத வழிபாடு மேற்கொள்ளும் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

Updated On :13 ஜனவரி 2021, 1:31 pm

சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.

சீா்காழியில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் கோயில் உள்ளது. திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய தலமான இக்கோயிலில் அமைந்துள்ள மலைக் கோயிலில் தோணியப்பா், உமாமகேஸ்வரி, சட்டநாதா் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா்.

இக்கோயிலில், தனுா் மாத வழிபாடு மேற்கொள்ள தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வருகை தந்தாா். அவா், ஆபத்துக்காத்த விநாயகா், சுவாமி, அம்பாள், உமாமகேஸ்வரா், சட்டநாதா், திருஞானசம்பந்தா் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்தாா்.

இதில், சீா்காழி சட்டநாத தேவஸ்தானம் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள், அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஏ.கே. சந்திரசேகரன், சாயிராம் கல்வி நிறுவனத் தலைவா் ராஜா, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சரண்ராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் செயலாளா் செந்தில்குமாா், திமுக பொருளாளா் முத்து, காங்கிரஸ் முன்னாள் மாவட்டச் செயலாளா் விஆா்ஏ.அன்பு உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.