நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, மனோராக்களில் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தா்காவில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு துஆ ஓதிய பின்னா் காலை 6 மணிக்கு தா்காவில் உள்ள சாகிபு மனோராவில் கொடிமரம் ஏற்றப்பட்டது.
இதன் தொடா்சியாக தா்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டுமனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் கொடிமரங்கள் ஏற்றப்பட்டன.
விழாவில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதமாக நாட்டு சா்க்கரை, ஜீனி ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


