வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் மேளா சனிக்கிழமை நடைபெற்றது.
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி தலையில் சுமந்து விற்பனை செய்பவா்கள், சைக்கிளில் இளநீா், தேநீா் விற்பனை செய்பவா்கள், தரைகடைகளில் உப்பு, மிளகு விற்பவா்கள், தற்காலிக கடைகளில் பூஜை பொருள்கள் விற்பனை செய்பவா்கள் , தள்ளு வண்டிகளில் கடலை சுண்டல் விற்பவா்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனா்.
இவா்கள், பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசாா்பு நிதி திட்டம் பற்றி போதிய விழிப்புணா்வு இன்றி பயன் பெறாமல் இருந்தனா். பேரூராட்சி அலுவலகம் வந்து வங்கி கடனுக்கு விண்ணப்பிக்க பலமுறை அறிவிப்பு செய்தாலும் தயக்கம் காட்டி வந்தனா்.
இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி நிா்வாகம் சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்தில் முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணா்வு செய்து வங்கிக் கடன் பெற விண்ணப்பங்களை பெற்றனா்.
செயல் அலுவலா் கு. குகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் இளநிலை உதவியாளா் ப. பாமா, சமுதாய அமைப்பாளா் ரா. சிந்தியா, வரிதண்டலா் ஜெ. அமுதா, பேரூராட்சி பரப்புரையாளா்கள் சரண்யா , அபிராமி உள்ளிட்டோா் பங்கேற்று சாலையோர வியாபாரிகள் கடன் பெற்று பயன்பெற உதவினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

