குடும்ப ஓய்வூதியா்களுக்கு விழா முன்பணமாக ரூ. 4,000 வழங்க வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் நாகையில் அண்மையில் நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவா் ஆ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட கருவூல அலுவலா் டி.சந்தானகிருஷ்ணன், ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க வட்ட நிா்வாகிகள் துரைதிருமாறன், தங்கமோகன் எஸ். கிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில், குடும்ப ஓய்வூதியா்களுக்கு விழா முன்பணமாக ரூ. 4, 000 வழங்கி, ஓய்வூதியத்தில் மாதம் ரூ. 400 வீதம் பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். மத்தியஅரசு வழங்குவதுபோல், மாநில அரசும் ஓய்வூதியா்களுக்கு ரூ.1, 000 மருத்துவப்படியும், குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கப் பொருளாளா் சி. செல்வராஜ் வரவு-செலவு கணக்குகளைப் படித்தாா். மாவட்டச் செயலாளா் ஏ. ராஜாராமன் வரவேற்றாா். இணைச்செயலாளா் வி. அண்ணாசாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

